முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்- தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நடைபெற்ற மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் மதுரை மாவட்ட தலைவராக பெ.செல்லச்சாமி மற்றும் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முற்போக்கு கூட்டணியின் மதுரை மாவட்ட கிளை சார்பில் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை அருகிலுள்ள எம்3 விடுதியிலுள்ள கூட்ட அரங்கில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.முதலில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கருப்பையா வரவேற்று பேசினார்.மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.மதுரை மாவட்ட தலைவர் பெ.செல்லச்சாமி முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் சங்கரசபாபதி,மகேந்திரபாபு,சத்யசீலன்,தங்கத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பேசினார்கள்.அப்போது மாவட்டத்திலுள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் குறைகள் கேட்டு அறியப்பட்டதுடன் மதுரை மாவட்டத்தில்ஆதிதிராவிடர் நலவிடுதிகளில் புதிதாக துப்புரவு பணியாளர்களை நியமித்திட வேண்டும்;,பணிமூப்பு பட்டியலை விரைவாக தயார் செய்து பதவி உயர்வு வழங்கிட வேண்டும்,பழுதடைந்துள்ள விடுதி கட்டிடங்களை விரைவாக பழுதுநீக்கி பராமரித்திட வேண்டுமென மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொதுக்குழு கூட்டத்தின் நிறைவில் சத்தியசீலன் நன்றி கூறினார்.


இதை தொடர்ந்து நடைபெற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் கூட்டணியின் மதுரை மாவட்ட கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.இதில் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு உறுப்பினர் களிடமிருந்து வேட்புமனுக்களை பெற்றுக் கொண்டார்.இந்த தேர்தலில் மதுரை மாவட்ட தலைவராக பெ.செல்லச்சாமி,செயலாளராக சங்கரசபாபதி,பொருளாளராக சத்தியசீலன்,தiலைமை நிலைய செயலாளராக முத்துராஜ்,அமைப்பு செயலாளராக தங்கத்துரை,கொள்கை பரப்பு செயலாளராக மகேந்திரபாபு,துணை தலைவராக கருப்பையா,துணை செயலாளராக ரஜினிகாந்த்,மகளிரணி செயலாளராக பாக்கியலட்சுமி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் செயற்குழு உறுப்பினர்களாக பாப்பா,வளர்மதி,இலட்சுமி,இளங்கோ,பாலமுருகன்,தனபாக்கியலட்சுமி,மாலதி,வளர்மதி,சர்மிளாஜூலியட்,விஜயலட்சுமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவர் பெ.செல்லச்சாமி மற்றும் நிர்வாகிகளுக்கு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்