முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஞ்சாவுடன் மூவரை இலங்கை போலீஸார் கைது செய்து விசாரணை.

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- ராமேசுவரம் கடலோரப்பகுதி வழியாக இலங்கை பகுதிக்கு கடத்தி செல்லப்பட்ட  30 லட்சம் மதிப்புள்ள  கேரள கஞ்சாவுடன்  இலங்கை  பகுதியை சேர்ந்த மூவரை இலங்கை வல்வெட்டித்துறை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்திய பாக்ஜலசந்தி கடலான ராமேசுவரம் கடலோரப்பகுதி வழியாக யாழ்ப்பாணம்  கடல் பகுதிக்கு கேரள கஞ்சா கடத்தி வருவதாக இலங்கை போலீஸார்களுக்கு  இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில்

 இலங்கை யாழ்பாணம் கடல் கரைப்பகுதியில்  இலங்கை போலீஸார்கள் நேற்றுக்கு முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் திரிந்த மூவரை பிடித்து போலீஸார்கள் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் போலீஸார் மூவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பின்னர் இலங்கை யாழ்பாணம் கல்வெட்டி  காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.விசாரணையில் ராமேசுவரம் பகுதியிலிருந்து படகில் கடத்தல்காரர்கள் 120 கிலோ கஞ்சா  அடங்கிய நான்கு பார்சலை  கொண்டு வந்து தந்ததாகவும்.இதன் மதிப்பு 30 லட்சம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.அதன் பின்னர் போலீஸார் மூவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago