முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேத்துப்பட்டு திவ்யா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

சேத்துப்பட்டு திவ்யா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சேத்துப்பட்டு திவ்யா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 131 மாணவர்களுக்கு வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஜெயராஜ் பட்டங்களை வழங்கினார். இதில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பா.செல்வராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் செந்தில்குமார், துணைத்தலைவர் பொறியாளர் பிரவின்குமார், கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி, புல முதன்மையர் தாமஸ்அப்பாதுரை சுகிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 131 மாணவர்களுக்கு வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஜெயராஜ் பட்டங்களை வழங்கி பேசினார். பல்வேறு பாடப்பிரிவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணர்களுக்குதாளாளர் பா.செல்வராஜன் பாராட்டி ஊக்கதொகை வழங்கினார். இதில் பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்