நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. திருச்செந்தூர் தாசில்தார் செந்தூர்ராஜா தலைமைவகித்து தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்;. பள்ளித் தாளாளர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியை தவமணி தேவி வரவேற்றார். 270மாணவிகளுக்கு தமிழகஅரசின் விலையில்லாமிதிவண்டி வழங்கப்பட்டன.நாசரேத் கிராம நிர்வாக அதிகாரி தேசிகன் மற்றும் ஆசிரியைகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை ஜூலியட் ஜெயசீலி நன்றி கூறினார்.