முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேரு கல்விக் குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

நேரு கல்விக்குழுமங்களின் சார்பில் அதன் நிறுவனர் பி.கே.தாஸ் நினைவாக சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி வருகின்றது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த 60 ஆசிரியர்களுக்கும், கேரளாவைச் சேர்ந்த 19 ஆசிரியர்களுக்கும் சிறந்த நல்லாசிரியர்; விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர் ஸ்ரீ கே. கே. நாயுடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர். ஆர். சௌந்திரராஜன், கோயம்புத்தூர், சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் டி. வில்சன் ஜெயக்குமார், பழனி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. கே. புழனிசாமி மற்றும் கேரளா மாநிலம் கோட்டயம்  எம்ஜிஎம் என்எஸ்எஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு.கே.ஜி. சந்தோஷ் குமார் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், அலத்தூர் கிரேஷ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.இஷாக் சிறந்த முதல்வருக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதுகள் நேரு கல்வி நிறுவனங்களின் சார்பில் நிறுவனர் ஸ்ரீ பி.கே.தாஸ் அவர்களை நினைவு கூறும் வகையில் வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம், கேடயம், சான்றிதழ்களும், சிறப்பு நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம், கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்தவர்களை விழா ஒருங்கிணைப்பாளர் என். ராஜ்குமார் வரவேற்றார். நேரு கல்விக் குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான பி.கிருஷ்ண குமார் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட நீதிபதி ஏ. முகமது ஜெயாபுதின் கலந்துக் கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கும் விருதுகளை வழங்கினார். 

விழா முடிவில் நேரு இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரி முதல்வர் பி.மணியரசன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்