முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, தலைமையில் நடைபெற்றது.

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும்  நாள்  கூட்டம்  மாவட்ட  கலெக்டர்  ச.ஜெயந்தி,   தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,  பொது மக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழங்கப்பட்ட  425 மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட  கலெக்டர்   அதன் மீது உரிய நடவடிக்கையினை,  உடனடியாக  மேற்கொள்ள  தொடர்புடைய துறை  அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்கள்.

மேலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு வட்டத்தைச் சார்ந்த 21 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000/- வீதம் ரூ.2,52,000/- மதிப்பில் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை என மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள். மேலும், சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில்  தேசிய  அளவில்  டேக்வாண்டோ  போட்டியில்   மூன்றாம்  இடம் பெற்ற திருப்பூர் செங்கப்பள்ளி, ஸ்ரீ குமரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ரிகாலின் ரோசனை  மாவட்ட கலெக்டர்  பாராட்டினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துனை கலெக்டர் சுகவனம், தனித்துணை கலெக்டர்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் நோயலின்ஜான்  உள்ளிட்ட அனைத்து  அரசுத்துறைகளின் அலுவலர்கள்  பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்