முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறுவனத்தின் உதிரி பாகங்களை திருடிய பாதுகாவலர் மற்றும் நண்பர் கைது

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      சென்னை

 

சென்னை பூந்தமல்லி, பைபாஸ் சாலை, என்ற முகவரியில் Kftçæš TVS & Sons Private Limited என்ற பெயரில் வாகன உதிரிபாகங்கள் தயார் செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ரவிச்சந்திரன் (52), என்பவர் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தீனம் மதியம் 03.00 மணிமுதல் இரவு 11.00 மணி வரையில் ரவிச்சந்திரன் என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது, இரவு சுமார் 10.45 மணியளவில், சத்தம் கேட்டபோது, மேற்படி நிறுவனத்தின் உதவி பாதுகாவலர் அதிகாரி வேல்முருகன் என்பவர் எழுந்து சென்று பார்த்தபோது, ரவிச்சந்திரன் மற்றும் மற்றொரு நபர் சேர்ந்து, மேற்படி நிறுவனத்தின் உதரி பாகங்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்ததை பார்த்து சத்தம் போடவே, அவ்வழியே சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பூந்தமல்லி சுற்றுக் காவல் ரோந்து வாகன காவல் உதவி ஆய்வாளர், பொருட்களை திருடிய இருவரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.விசாரணையில், பாதுகாவலர் ரவிச்சந்திரன் மேற்படி நிறுவனத்தின் வாகன உதரி பாகங்களை யாருக்கும் தெரியாமல் திருடிச் சென்று வெளியில் விற்று பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, அவரது நண்பர் ஞானசேகரன் என்பவரை நேற்றுமுன் தீனம் இரவு வரவழைத்து, மேற்படி நிறுவனத்தின் சுமார் ரூபாய்.50,000/- மதிப்புள்ள 23 உதிரி பாகங்களை மூட்டையாக கட்டி, ஞானசேகரனின் இருசக்கர வாகனத்தில் ஏற்றும்போது பிடிபட்டது தெரியவந்தது. அதன்பேரில், உதரிபாகங்களை திருட முயன்ற மேற்படி நிறுவனத்தின் பாதுகாவலர் ரவிச்சந்திரன்(52), பூந்தமல்லி, மற்றும் ஞானசேகரன் (53), கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50,000/- ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பல்சர் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் மற்றும் ஞானசேகரன் ஆகியோர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்