முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கட்கிழமை "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தலைமையில் நேற்று(13.02.2017) நடைபெற்றது.

 

 

241 மனுக்கள்

 

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 241 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சென்னை இராணிமேரி கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் அரியலூர் மாவட்டத்திலிருந்து பளிங்காநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சார்ந்த ப.ஆனந்தராஜ், க.மாதன் 9-ம் வகுப்பு மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் வைத்த அறிவியல் கண்காட்சிக்கு மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றமைக்காகவும், மாணவர்களின் வழிகாட்டியாக அறிவியல் ஆசிரியர் ஜெ.உஷா அவர்களுக்கும் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் 98 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2 கோடியே 43 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் வங்கிகள் மூலம் நேரடி காசோலைகளை மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரெங்கராஜன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஷ்வரி, துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) மங்கலம், முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, புதுவாழ்வுத் திட்ட மேலாளர் முத்துவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்