முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று (13.02.2017) நடைபெற்றது.

இலவச பட்டா

 

 

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 292 மனுக்களை பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

 

குறை தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தன்விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் பார்வையற்ற கல்லூரி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கைதொலைபேசி மற்றும் வானொலி தலா ரூ.1800 வீதம் 25 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மொத்தம் ரூ.45000 மதிப்பிலும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர், நெய்குப்பை சேர்ந்த அறிவழகி என்ற பயனாளிக்கு ரூ.4950 மதிப்பிலான தையல் இயந்திரத்தினையும் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், தனித்துறை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) உதயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்