முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் நிர்மல் ராஜ் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

பட்டா மாறுதல்

 

 

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 171 மனுக்களை மாவட்ட கலெக்டர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

 

அதனைத்தொடர்ந்து 2015-16 ஆம் ஆண்டில் மார்சஃஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதன்மை பெற்ற ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகைக்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ட்டி.மோகன்ராஜ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) விஜயலெட்சுமி உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்