முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் அழைப்பு: திருமங்கலம் தொகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.-தமிழகத்தில் ஆட்சியமைத்திட அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

கவர்னர் அழைப்பு:

தமிழக சட்டமன்ற அ.தி.மு.க தலைவராக கடந்த 5ம் தேதி அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த 7ம் தேதி அவரை முன்மொழிந்த முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனிடையே பொதுச் செயலாளருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதையடுத்து நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதை தொடர்ந்து அவர் கவர்னர் வித்யாசாகர்ராவை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.இந்நிலையில் நேற்று காலை கவர்னரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து கவர்னர் மாளிகைக்கு சென்றிருந்த எடப்பாடி பழனிச்சாமியை தமிழகத்தில் ஆட்சியமைத்திடுமாறு கவர்னர் வித்யாசாகர்ராவ் கேட்டுக்கொண்டார்.இதையடுத்து தமிழகம் முழுவதிலும் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

நகர,ஒன்றிய அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்:

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைத்திட எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் அழைப்பு விடுத்ததையடுத்து மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோரது வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.திருமங்கலம் நகர் தேவர் திடலில் மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அ.தமிழச்செல்வம்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் நகர் மன்றத் தலைவர் மு.சி.சோ.சி.நிரஞ்சன் ஆகியோரது தலைமையில் திரண்ட நகர,ஒன்றிய அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.அப்போது நகர் நிர்வாகிகள் கு.வைரவன்,ராஜாமணி,கவிராஜன்,சிங்கராஜபாண்டியன்,ரமேஷ்,பிரபு,கரிகாலன்,இன்பம்,மூர்த்தி,அக்னிவேலு,பாலமுருகன்,வழக்கறிஞர்கள் சம்பத்,சஞ்சய்காந்தி,முத்துராஜா, வெங்கடேஷ்,பாண்டியராஜ்,ஒன்றிய நிர்வாகிகள் உரப்பனூர் சாமிநாதன்,அன்னகொடி, காராளம்,ரவி,பாண்டி,மாரி, இளங்கோவன்,பிச்சைமணி,முனியாண்டி,முருகன்,கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

அம்மா பேரவை கொண்டாட்டம்:

இதையடுத்து தமிழகத்தில் ஆட்சியமைத்திட அ.தி.மு.க சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் நகர் தேவர்திடலில் திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன் தலைமையில் திரண்ட அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழந்தனர்.அப்போது அவ்வழியே வந்த பேருந்துகளை நிறுத்தி அதில் பயணம் செய்த பொதுமக்களுக்கு சாத்தங்குடி தமிழழகன் மற்றும் நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினார்.முன்னாள் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் சௌடார்பட்டி பாண்டியன்,ஒன்றிய துணை செயலாளர் சுகுமார்,கட்சி நிர்வாகிகள் சிவன்ராஜன்,அலப்பலச்சேரி முருகன்,சிவஜோதிதர்மர், பிச்சைமணி, கோடீஸ்வரன், ஆறுமுகம்,விருமாண்டி, முத்துராமன்,சிவசக்தி, பாலசுப்பிரமணியன்,அழகர்சாமி,சிவன்காளை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

-

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்