முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

  
மதுரை.-மதுரை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பின்புறம் உள்ள உலகனேரி பகுதிகள் மற்றும் ஒத்தக்கடை பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியினை ஆணையாளர்சந்தீப் நந்தூரி  முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கொ.வீரராகவராவ், ஆய்வு மேற்கொண்டார்.
 சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மதுரை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஆணையாளர்சந்தீப்நந்தூரி   உத்தரவின்படி மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுப் பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாநகராட்சி மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.

மேலும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான காலி இடங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்றுமாறும் தவறும் பட்சத்தில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதுடன் அதற்குண்டான செலவினத்   தொகை   தங்களிடமிருந்து   வசூலிக்கப்

படுவதோடு அபராதத் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி மூலம் அறிவிக்கப்பட்டு சீமைக் கருவேல மரங்களை அகற்றாற நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் பின்புறம் உள்ள உலகனேரி மற்றும் ஒத்தக்கடை பகுதிகளில் சுமார் 80 ஏக்கர் தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை ஆணையாளர்சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர்கொ.வீரராகவராவ், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் அபராதத்துடன் இருமடங்குதொகையினை வசூலிக்குமாறு உத்தரவிட்டனர். எனவே பொதுமக்களும் தனியார் இடங்களுக்கு சொந்தமான நில உரிமையாளர்களும் தங்கள் இடத்தில் வளர்ந்;துள்ள சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என ஆணையாளர்சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர்மதுரம், செயற்பொறியாளர்ராஜேந்திரன், உதவிப் பொறியாளர் திருமதி.பொன்மணி, மக்கள் தொடர்பு அலுவலர்சித்திரவேல், பொதுப்பணித்துறையினர், வருவாய்த் துறையினர் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்