எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடரில் விராட் கோலிக்கு, ஸ்டார்க் கடும் சவாலாக விளங்குவார் என்று மைக் ஹஸ்சி கூறியுள்ளார்.
23-ம் தேதி தொடக்கம்
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 23-ம் தேதி புனேயில் தொடங்குகிறது. தொடர்ந்து 4 டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதங்கள் அடித்து வரலாறு படைத்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலியே ஆஸ்திரேலிய பவுலர்களின் பிரதான குறியாக இருப்பார். ரன்குவிப்பில் மிரட்டி வரும் அவரை சீக்கிரம் வீழ்த்திவிட்டால் தங்களது கை ஓங்கிவிடும் என்று திட்டம் போட்டு அதற்கு ஏற்ப ஆஸ்திரேலிய பவுலர்கள் வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.
கடும் சவால் அளிப்பார்
இந்த நிலையில் கோலிக்கு, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடும் குடைச்சல் கொடுப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹஸ்சி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிறந்த பவுளர்
இந்திய துணை கண்டத்தில் நிலவும் சூழலில், அற்புதமாக பந்து வீசக்கூடியவர், மிட்செல் ஸ்டார்க். பந்துவீச்சில் நல்ல வேகத்தை காட்டுவதுடன், புதிய பந்திலும் ஸ்விங் செய்ய கூடியவர். அத்துடன் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்வதிலும் கில்லாடி. இந்த தொடர் முழுவதும் அவர் விராட் கோலிக்கு பலத்த சவால் அளிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எது எப்படியோ, சமீப காலமாக வியப்புக்குரிய வகையில் விளையாடி வரும் விராட் கோலியை கட்டுப்படுத்த எல்லா பவுலர்களும் ஒருமித்த முயற்சியை வெளிப்படுத்த வேண்டும்.
அனுபவம் உண்டு
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு இந்திய மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும், அடுத்து வரும் ஐ.பி.எல். போட்டிக்கும் அவருக்கு உதவிகரமாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் மீது அவர் மிகுந்த நம்பிக்கை வைத்து, பொறுமை காப்பது அவசியம். தாக்குதல் ஆட்டத்திலும் சரி, தற்காப்பு ஆட்டத்திலும் சரி களத்தில் சரியான சமச்சீருடன் செயல்பட வேண்டும்
மிகப்பெரிய சவால்
ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் குவிக்க வேண்டிய நெருக்கடி ஸ்டீவன் சுமித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு எப்போதும் இருக்கும். இருவரும் தொடர்ந்து ரன்வேட்டையாடும் தாகத்தில் இருப்பது நல்ல விஷயமாகும். அவர்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள். ஆனால் இருவரும் இந்த தொடரில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
அஸ்வின் - ஜடேஜா
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் இங்குள்ள சூழலில் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். குறிப்பாக அஸ்வின் இங்குள்ள நிலைமையை நன்கு புரிந்து வைத்திருப்பவர். அதை எப்படி சாதகமாக மாற்ற வேண்டும் என்பது அவருக்கு தெரியும். எனவே ஒவ்வொரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது, களத்தில் எந்த வகையில் தங்களது திட்டத்தை செயல்படுத்துவது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
மிகுந்த கவனம்
இந்த இந்திய சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மிகுந்த கவனம் செலுத்துகிறது. அதனால் தான் ஆஸ்திரேலிய அணி தீவிரமாக (துபாயில் பயிற்சி) தயாராகி உள்ளது. இனி களத்தில் அவர்கள் எத்தகைய திறமையை வெளிக்காட்டுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் நன்றாக தயாராகி இருந்தால் தான் களத்தில் சாதிக்க முடியும். இவ்வாறு மைக் ஹஸ்சி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.