எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் பழைமையான ரிக் வேதத்தில் சிவனது திருப்பெயர்கள் வருகின்றன. ‘சிவன்’ என்பது மிகவும் புராதன சொல். இதற்கு கல்யாணம் மங்களம், சுபம், நன்மை, மகிழ்ச்சி, லட்சுமிகரம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.
பொதுவாக, தெய்வங்களை மிகவும் மரியாதையாக ‘மகா’ என்ற அடைமொழியுடன் அழைக்கிறோம். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, மகாகணபதி.... இப்படி அதுபோல் ‘மகா சிவன்’ என்று சிவனை அழைப்பதில்லை. அதற்குப் பதிலாக ‘சதாசிவன்’ என அழைக்கிறோம்.
‘சதா’ என்பது சிறப்பான சொல் ! இதற்கு எங்கும், எப்போதும், என்றும் இப்படிப் பொருள் கொள்ளலாம். அதாவது, எங்கும் - எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவர்.
தெங்வங்களுக்குத் திருவிழாக்களும் ஏராளம் தேவியின் மகிமையைப் போற்றுவது ‘நவராத்திரி’ ஈசனின் பெருமையைச் சிறப்பிப்பது சிவராத்திரி.
வேதங்களில் சாமமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ.. அதுபோல் விரதங்களில் மிகவும் உயர்ந்தது ‘மகா சிவராத்திரி விரதம்;’ என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
மாதா மாதம் சிவராத்திரி வரும் என்றாலும், மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி தினத்தை காலத்தில் வரும் சதுர்த்தசி தினத்தை ‘மகா சிவராத்திரி’ என்று போற்றி வழிபாடு செய்கிறோம். அன்றைய தினம் அனைத்து சிவ ஆலங்களிலும் விடிய விடிய நான்கு யாமங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கும்.
சூரியன் அஸ்தமனமான பின் தொடங்குவது முதல் யாம பூஜை. அடத்து இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நான்காம் யாமம் என்று இந்த வழிபாடு மறுநாள் அதிகாலை சூரியன் உதயமாவதற்குள் பூர்த்தி ஆகிவிடும்.
‘மகா சிவராத்திரி” பூஜையை முதலில் அம்பிகையே தொடங்கி வைத்தாள் என்று புராணங்கள் சொல்லும். இவ்வழிபாட்டில் மிகவும் மகிழ்ந்த ஈசன், உமைக்குத் தன் அருளை வழங்கினான். அப்போது “நான் செய்த இந்த நான்கு யாம வழிபாட்டை எவர் ஒருவர் செய்த கடைபிடிக்கிறாரோ.. அவருக்கு அனைத்து விதமான நலன்களையும் வழங்கி, இறுதியில் மோட்சம் தந்தருள வேண்டும்” என்று பிரார்த்திக்க அதன்படி ஈசன் அருளினானாம்.
‘சிவராத்திரி’ என்ற சொல்லுக்கு ‘மோட்சம் அருள்வது’ என அர்த்தம்
‘மகா சிவராத்திரி’ காலத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சர்வேஸ்வரனை பூஜிப்பதாக ஐதீகம் எனவேதான் புனிதமான இந்நாளில் உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் விடிய விடிய வழிபாடு நடக்கிறது.
மார்ச் 7ந்தேதி (திங்கள் கிழமை) ‘மகா சிவராத்திரி’ வருகிறது. மாதம்தோறும் வரும் மற்ற சிவராத்திரிகளில் இறைவனை வழிபாட்டு நாம் பெறும் எல்லா நலன்களையும் மாசி மாத சிவராத்திரி மட்டுமே வழங்குவதால், இதை ‘மகா சிவராத்திரி’ என்று போற்றுகிறோம்.
சிவராத்திரியின் பெருமையை சிவமகா புராணம் ஸ்கந்த புராணம், பத்ம புராணம் போன்றவை எடுத்துரைக்கின்றன. சிவபெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டு விரதங்களைப் பரிந்துரைக்கின்றன நூல்கள். அவை சோம வார விரதம், திருவாதிரை விரதம், உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம், ரிஷப விரதம்.
இவ்விரதங்களில் மிகவும் சிறப்பானது ‘மகா சிவராத்திரி’ விரதமாகும். எண்ணற்ற சிவ பக்தர்கள் அன்றைய தினம் முழுக்க விரதம் மேற்கொண்டு இல்லத்தில் பகலில் சிவ பூஜைகளைச் செய்துவிட்டு, மாலை வேளையில் சிவாலயங்களுக்குச் செல்வர்.
‘மகா சிவராத்திரி’ உலகம் முழுக்க பிரபலம். வட இந்தியாவில் உள்ள சிவாலயங்களில் இறைவனைத் தொட்டு நாமே அபிஷேகம் செய்யலாம். ஆனால் தென்னகத்தில் அது சாத்தியம் இல்லை.
மகா சிவராத்திரி அன்று காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் மிகவும் ஜெகஜோதியாகக் காட்சி தரும். லட்ச தீபம் ஏற்றப்படும். ராமேஸ்வரம் ராமநாதருக்கு ஆயிரம் குடங்களில் புனிதமான நீரைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும் வேத மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்ட ஆயிரம் சங்குகளின் நீரைக் கொண்டு விஷேச அபிஷேகம் நடக்கும்.
நேபாளத்தில் பசுபதிநாதர் ஆலயத்தில் லட்ச தீபம் ஏற்றப்டும். நேபாள மன்னர் தன் சொந்த செலவில் ‘மகா சிவராத்திரி’ வழிபாட்டை நடத்துவார். இமயமலையில் வசிக்கின்ற எண்ணற்ற சாதுக்கள் பெரும் திரளாகத் திரண்டு வந்து பசுபதிநாதரை வணங்குவார்கள்.
ஸ்ரீசைலம், காளகஸ்தி, சென்னை மயிலாப்பூர், திருவண்ணாமலை, மதுரை போன்ற எண்ணற்ற திருத்தலங்களில் விடிய விடிய பல்லாயிரக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
சிவபெருமானுக்கு அபிஷேகம் சிறப்பு. எனவே, மகா சிவராத்திரி தினத்தில் நான்கு யாமங்களிலும் ஈசனுக்கு நடக்கின்ற விசேஷமான அபிஷேகத்தை நாம் தரிசித்தல் நலம். நம்மால் முடிந்த அபிஷேக திரவியங்களை வாங்கிக் கொடுத்தால் கூடுதல் மகிமை. ஒருவேளை வாங்கித் தருவதற்கு வசதி இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். சிவனுக்கு மிகவும் உகந்த வில்வத்தையாவது அர்ப்பணித்து வணங்கவும்.
‘ஒரே ஒரு வில்வ இலையை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தாலே முந்தைய மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் அகன்றுவிடும்’ என்று புராணங்கள் கூறுகின்றன. வில்வ இலைகளை அர்ப்பணித்து எவர் ஒருவர் தன்னை வணங்கினாலும், அவரை எத்தகைய துயரில் இருந்தும் காப்பாற்றி அருள்வார் சிவபெருமான். அதுவும் புனிதமான ‘மகா சிவராத்திரி’ யில் வில்வ இலையை லிங்கத் திருமேனிக்கு சமர்ப்பித்தால் கோடிக்கணக்கான மலர்களைக் கொண்டு வழிப்பட்டதற்கு சமம்.
‘மகா சிவராத்திரி விரதம்’ மேற்கொள்வது எப்படி
அன்றைய தினம் இரவு முழுக்கக் கண் விழித்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபாட்டால் நினைத்த காரியம் நடக்கும்.
விரதம் இருப்பவர்கள்முதல் நாள் பகல் பொழுதில் மட்டும் உணவு அருந்தவும், அடுத்த நாள் ‘மகா சிவராத்திரி’ காலையில் குளித்துவிட்டு, சிவபெருமானுக்கு உண்டான வழிபாடுகளைச் செய்யவும். மாலையில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்யுங்கள்.
நான்கு யாமங்களிலும் ஒரே சிவாலயத்தில் இருந்து வழிபட்டாலும் சரி.. அல்லது ஒவ்வொரு யாதத்துக்கும் ஒரு சிவாலயம் சென்று தரிசித்தாலும் சரி நான்காம் யாமம் தரிசித்த பின் இல்லம் வந்து நீராடவும். அதன் பின் முடிந்த அளவுக்கு சிவனடியார்களை அழைத்து அவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டுத் தானும் உண்ணவும் விரதம் என்பது ஒரு கட்டுப்பாடு உணவையும் உறக்கத்தையும் விலக்கினால்தான் புலன்கள் கட்டுப்படும். புலன்கள் கட்டுப்பட்டால் தான் இறை இன்பம் பெற முடியும்.
சிவராத்திரி அன்று முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள்.. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு யாம பூஜை பூர்த்தியான பிறகு பால் பருகலாம். பழங்கள் உண்ணலாம். தண்ணீர் அருந்தலாம். சுர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பு இல்லாமல் அவித்துச் சாப்பிடலாம். சக்தி தரும் சத்துமாவை வெல்லத்துடன் கலந்து உட்கொள்ளலாம்
‘மகா சிவராத்திரியில் எப்பேர்பட்ட கொடுடையானவர்களும் சிவனை தரிசித்தால் இறைவனின் பரிபூரண ஆசி உண்டு. இதை விளக்கும் விதமாக எத்தனையோ புராணக் கதைகள் கூறப்பட்டாலும் பொதுவாகச் சொல்லப்படுவது இதுதான்.
அடர்ந்த வனத்தில் நள்ளிரவில் சிக்கிக்கொண்ட வேடன் ஒருவன் பாதுகாப்புக்காக இடம் தேடும்போது புலி துரத்த ஆரம்பித்தது. பயத்தின் காரணமாக அலறி அடித்தபடி ஒரு மரத்தின் மீதேறி வலுவான கிளையில் அமர்ந்து கொண்டான். துரத்தி வந்த புலி இவன் எப்படியும் கீழே இறங்குவான் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மரத்தின் அடியில் அமர்ந்துவிட்டது.
புலி நகர்வதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட வேடனும் மரத்திலேயே இருந்தான. நாம் தூங்கக்கூடாது.. தூக்கத்தில் கீழே விழுந்துவிட்டால், புலிக்கு இரையாகிவிடுவோம் என்று பயந்து தான் அமர்ந்த மரத்தில் இருந்து இலைகளை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் பிய்த்துக் கீழே போட்டான்.. மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருப்பதும், அது ‘மகா சிவராத்திரி தினம் என்பதும் வேடனுக்குத் தெரியாது.
அதிகாலை மலர்ந்தது புலியைக் காணாததால் கீழே இறங்கினான். அப்போது சிவலிங்கத்தில் இருந்து ஈசன் வெளிப்பட்டு நேற்றைய தினம் மகா சிவராத்திரி உறங்கவும் இல்லை. உணவும் அருந்தாமல் விரதம் கடைபிடித்திருக்கிறாய். தவிர நீ அமர்ந்திருந்தது வில்ல மரம். எனக்கு வில்வத்தைக் கொண்டு அர்ச்சித்ததால் உனக்கு சகல நலன்களும் வழங்குகிறேன். உரிய காலத்தில் மோட்சம் தருவேன். என்று ஆசிர்வதித்து மறைந்தாராம்.
சிவராத்திரி விரதம் மேற்கொள்வதால் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு அகல்கின்றன. ஆலயங்களிலும், வீடுகளிலும் நமசிவாய மந்திரத்தை அதிகம் ஜெபிக்க வேண்டும். முக்கியமாக படிக்க வேண்டியது - திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம்.
இதை படித்தால் மனதில் இருக்கும் பயம் அகலும். தைரியம் பெருகும் தவிர சிவபுராணம் லிங்காஷ்டகம், தேவாரம் திருவாசகம் ஆகயவற்றையும் படிக்கலாம் திருவிளையாடல் புராணம் பெரிய புராணம் ஆகியவற்றைப் பிறர் சொல்லக் கேட்டாலும் அல்லது நாமே படித்தாலும் கூடுதல் பலன் பெறலாம்
புனிதமான மகா சிவராத்திரி தினத்தில் சிவலிங்கத் திருமேனியை தரிசித்து தீங்கு இல்லா வாழ்வு பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.