முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தகவல்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      திருச்சி

திருச்சி மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் உயர பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

 

நலத்திட்ட உதவிகள்

 

இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வகையான திட்டங்கள் அறிவித்து பொருளாதார முன்னேற்றம் பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்;டுமன்றி திருநங்கைகளின் வாழ்க்கைதரம் உயர்ந்திடும் வகையிலும் சமுதாயத்தில் சரிநிகராக வாழ்வதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளும் தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 218 திருநங்கைகள் உள்ளனர். அவர்களுக்கு திருநங்கைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 128 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 47 நபர்கள் 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள். அவர்களில் 12 திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 13 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும், 5 நபர்களுக்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூதாயத்தில் திருநங்கையர்களின் பொருளாதார முன்னேற்றம் உயர்ந்து சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 60 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளையும், சுயஉதவிக் குழுக்களுக்கு 25 சதவீதம் மானியத்தில் கறவை மாடு வளர்த்து பால் உற்பத்தி செய்வதற்காக ரூபாய் 10 இலட்சத்து 50 ஆயிரமும், அழகு நிலையம் வைத்திடுவதற்கு ரூபாய் 2 இலட்சத்து 25 ஆயிரமும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது.

 

வங்கி கடன்

 

மாவட்டத்தில் திருநங்கைகளுக்கென இரண்டு சுயஉதவிக்குழு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சமூக நலத்துறையின் சார்பாக தொழிற்பயிற்சியும், அரசு மானியத்தில்; வங்கிக்கடன் உதவியும் வழங்கி தற்பொழுது பாத்திரக்கடை, பெட்டிக்கடை, பால்வியாபாரம், கறவை மாடு மற்றும் ஆடு வளர்ப்பு மையங்கள் அமைத்து சிறப்பாக வாழ்வதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம்; திருநங்கைகள் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து, அவர்களும் சமூகத்தில் நல்மதிப்புடன் வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்