எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பொது ஏலம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முனைவர் நடராஜன் எச்சரித்துள்ளார்.
குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர்;.ச.நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் எதிர்பார்த்த அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்ட நெல், சிறுதானியம் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் முழுவதுமாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு ஏதுவாக வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வருவாய் கிராமம் வாரியாக பயிர்மதிப்பீட்டு அளவு அறுவடை பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. விரைவில் பயிர் அறுவடை பரிசோதனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு பரிசோதனை முடிவுகள் அனைத்தும் அறிக்;கையாக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.
தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட சாத்தியக்கூறு உள்ள இடங்களை துல்லியமாக கண்டறிந்து அவ்விடங்களுக்கு உகந்த மாற்றுத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட ஏதுவாக வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டு ரூ.13.17 கோடி மதிப்பில் 1,061 பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக 610 பணிகள் மேற்கொள்ள ரூ.7.22 கோடி மதிப்பில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பணி ஆணை வழங்கப்பட்டுள்ள குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிகளை உடனடியாக நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் கீழ் உள்ள கண்மாய்கள்-குளங்கள்-ஏரிகள் ஆகியவற்றில் விவசாயம் மற்றும் இதர பணிகளுக்கு தேவையான கிராவல், சவுடு மற்றும் மண் ஆகியவற்றை தூர்வாறும் நோக்கில் அரசு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் 60 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு மாவட்ட அரசு இதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகள் தூர்வாருதல்
இதுதவிர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், ஊரணிகள் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு உரிய கால அவகாசம் வழங்கியும், இதுநாள் வரையில் அகற்றாமல் உள்ள உரிமைதாரர்களுக்கு குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் 133-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வேருடன் அகற்றி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத நிலையினை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு பேசினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் 3 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு குறைந்த அளவிலான நீரைப் பயன்படுத்தி அதிக அளவிலான மகசூல் ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டு நீர்;ப்பாசனம் மற்றும் நுண்ணீர் பாசனம் ஆகிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் பயன்பெற சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருவதாகவும், தகுதியான விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.அலி அக்பர், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடைபராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ்.வெள்ளைச்சாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எஸ்.தமிழ் வேந்தன் உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.