எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழக சட்டசபையில் நடைபெறுகிறது. இந்த நம்பிக்கை தீர்மானத்தில் பங்கேற்று வாக்களிக்குமாறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென சபாநாயகரிடம் முன்னாள் அமைச்சர் மா.பா .பாண்டியராஜன் உள்ளிட்ட ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கவர்னர் உத்தரவு
தமிழகத்தில் முதல்வராக பதவியேற்குமாறு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் விடுத்த அழைப்பினை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றார். அவரோடு 30 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார். ஆனால் ஆட்சியமைத்த 2-ம் நாளான இன்றே பெரும்பாண்மையை நிரூபிக்கும் நம்பிக்கை தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக இன்று சட்டசபை கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூவத்தூர் சென்று, எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அரசு கொறடா கடிதம்
இதைத்தொடர்ந்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 134 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கும் தபால் மூலம் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம். அதில் அரசை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டவர்களுக்கும் தபால் மூலம் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள். அரசை ஆதரித்து தான் அவர்களும் வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.கவில் தான் உள்ளார்
இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறாரே ?
பதில்: அதுபற்றி எனக்கு தெரியாது.
கேள்வி: முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா?
பதில்: அவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் அ.தி.மு.கவில்தான் உள்ளார். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கும் சேர்த்து தான் தபால் மூலம் கடிதம் அனுப்பியிருக்கிறோம். அவர் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் அரசை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி: அவர்கள் எதிராக வாக்களித்தால் என்ன நிலை எடுப்பீர்கள்?
பதில்: அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். எதிர்த்து வாக்களித்தால் என்ன நிலை எடுப்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது. மேலும் ஒ.பன்னீர்செல்வம் அணி என்று செய்திகள் வெளியாகின்றன. அப்படியொரு அணி இல்லை, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இருந்தால் தான் அணி, 10 பேர் இருந்தால் அது நபர்கள் தான்.
கேள்வி: நாளை (இன்று) யார் தீர்மானம் கொண்டு வருவார்கள்?.
பதில்: நாளை (இன்று) சபைக்கு வாருங்கள், அப்போது தெரியும் என்றார் அவர்.
ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், செம்மலை, மாணிக்கம் உள்ளிட்ட எம்..எல்.ஏக்களுடன் தலைமை செயலகத்திற்கு வந்தார். சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார். இதன்பின்னர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில் இன்று சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்போம் என்றார் அவர். இதற்கிடையே முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
அவை முன்னவர்
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் அவை முன்னவராக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்தார். ஏற்கனவே சட்டமன்ற அவை முன்னவராக ஒ.பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.