எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி-தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இன்று (17.02.2017) நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
கருத்தரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழக அரசு தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வாழ்வில் முன்னேற என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதனை கண்டறிந்து தெரிவிக்கவும், மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் உள்ள வேலைவாய்ப்பினை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், தமிழக அரசின் மூலம் கடனுதவி பெற்று சுயதொழில் செய்து முன்னேற உள்ள வழிவகைகளை அறிந்து கொள்வதற்காகவும் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 82 இலட்சம் பேர்களும், மாவட்டத்தில் சுமார் 1,50,000 பேர்களும் அரசு வேலைவாய்ப்பு வேண்டி பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துள்ள அனைத்து நபர்களுக்கும் இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பு துறையின் மூலம் அரசு வேலை வழங்குவது சாத்தியமாகாது. எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (வுNPளுஊ), பணியாளர் தேர்வாணையம் (ளுளுஊ), வங்கிப்பணியாளர்கள் தேர்வாணையம் (ஐடீPளு), ஆசிரியர்கள் தேர்வாணையம் (வுசுடீ) மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் (வுNருளுசுடீ) தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களை, தேர்வுகளை எவ்வாறு அணுகுவது அதில் வெற்றி பெறுவது எப்படி எனவும் இந்த தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் வாயிலாக மாணவ, மாணவியர்களுக்கு வல்லுநர்களால் எடுத்துரைக்க உள்ளனர். போட்டித்தேர்வு எழுதியவர்கள் அனைவரும் வெற்றியாளர்களாக முடியுமா என்ற நிலையில் தொழில் முனைவோராக ஆவது எப்படி எனவும் அதற்காக வாயப்புகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தேர்வாளர்கள் மதிப்பெண் பெற தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் கடினமாக படித்திட வேண்டும். தற்போது இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் எந்த துறை சம்பந்தப்பட்ட வினாக்களாக இருந்தாலும், இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து எளிதாக படித்து விடலாம். தமிழக அரசு சுயஉதவிக்குழுக்கள் மூலம் கடனுதவி அளித்து, அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிவருவதோடு, இரண்டாம் கட்டமாக, கிராமங்களில் வாழும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு கடனுதவி அளித்து அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்து வருகிறது.
நாம் எந்த தொழிலைச் செய்தாலும், அதில் வெற்றி பெற கல்வி அறிவு அவசியமாகிறது. தமிழக அரசு சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக நீட்ஸ் திட்டத்தின் மூலம் ஐந்து இலட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை 25 சதவிகித மானியத்தில் கடனுதவி வழங்கி வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வசதிகளையும் மாணவ, மாணவியர்களிடையே கொண்டு செல்லும் பொருட்டு தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. எனவே, இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி வாழ்வில் வளம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி.பரமேஸ்வரிமகளிரியல் துறை இயக்குநர் (கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம்) முனைவர்.டெனிஸியாசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்மாவட்ட நன்னடத்தை அலுவலர் சிவக்குமார்இந்திய இராணுவம் லெப்.கர்னல் (ஓய்வு) சுப்பையாஇளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்திபெரியகுளம் வட்டாட்சியர் சுருளிமைதீன்தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் கல்வி நிறுவனங்களின் பொது செயலாளர் ராஜமோகன் தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் மகேஸ்வரன்முதல்வர் முனைவர்.சித்ராகல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.