முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடி சார்பில் ஜவ்வாது மலையில் விவசாயிகளுக்கு இயற்கைவழி வேளாண்மை பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் நடைப்பெற்றது

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

விஐடி பல்கலைக் கழகத்தின் சார்பில் ஜவ்வாது மலையில் உள்ள மலைவாழ் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பற்றிய ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று இயற்கைவழி வேளாண்மை முறைகள் பற்றிய கருத்துக்களை விளக்கினர். விஐடி பல்கலைக் கழகத்தின் நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஜவ்வாதுமலை கிராமவள மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சிறுதானிய மகத்துவ மையம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மலைவாழ் மக்களுக்கான இயற்கை வழி வேளாண்மை பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஜவ்வாது மலைப்பகுதியை சேர்ந்த உழவர் மன்றங்கள், விவசாய கூட்டு பொறுப்பு குழுக்கள், விவசாயிகள் என 140 பேர் பங்கேற்றனர். முகாம் தொடக்க விழாவிற்கு வருகை தந்தவர்களை விஐடி பல்கலைக் கழகத்தின் ஜமுனாமரத்தூர் கிராமவள மைய திட்ட இணையர் எஸ்.பாபு வரவேற்றார். ஜமுனாமரத்தூர் உதவி வேளாண்மை இயக்குநர்கள் பி.வடமலை, பி.சண்முகவேல், ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.பாண்டியன், ஆர்.ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மரிய ஜோசப், அன்பரசு, கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றம் தலைவர் முனைவர். பி.பரசுராமன் பங்கேற்று பேசுகையில் வேளாண்மை பணியில் இயற்கை வழியில் பசுந்தால் உரங்கள், இயற்கை உரங்கள், தொழு உரம், நுன்னுயிர் உரங்கள், இயற்கை நோய் மற்றும் பூச்சி முறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் கடைபிடித்தால் அதிக மகசூல் பெற முடியும். எனவே இயற்கை வழி வேளாண்மை முறையை பின்பற்றினால் மண்ணுக்கும் மனிதனுக்கும் பாதுகாப்பாக அமையும் என்றார். பயிற்சி முகாமில் விஐடி பல்கலைக்கழகத்தின் நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திட்ட அலுவலர் முனைவர். ஆர்.முத்துவீரன் பங்கேற்று விஐடி பலக்லைக்கழகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சமுதாய வளர்ச்சி பணிகள், ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கான திட்டப்பணிகள் பற்றி விளக்கி பேசினார். இதில் வேலூர் மாவட்டம் குருவராஜபாளையம் பகுதியில் உள்ள இயற்கை வேளாண்மை பண்மையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர். கே.கிருஷ்ண மனோகரன் பங்கேற்று விவசாயிகளுக்கிடையே பேசுகையில் கூறியதாவது் அதிகமான விளைச்சலுக்காக ரசாயன வழிமுறையில் விவசாயம் செய்யும் போது மண்ணின் இயற்கை நிலை மாசுபடுவதுடன் விளைபொருட்களை உண்ணும் போது உடலில் பக்க விளைவுகள் அதிகமாக தோன்றி உடல் வியாதிகள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு தன்மை குறைகிறது. அதே நேரத்தில் இயற்கை வழி வேளாண்மை செய்யும் போது இந்த பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இயற்கை வழியில் தாவர பொருட்களின் தொழு உரம், கடலை, வேப்பம், புங்கன் மற்றும் முத்து புண்ணாக்குகளை தகுந்த விகிதத்தில் சேர்த்து வேளாண்மையில் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார். முடிவில் திட்ட உதவியாளர் இ.செல்வராஜ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago