முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் அலுவலர் சோ.இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி.

 

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ தலைமையில், மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் கலெக்டர்அவர்களின் தலைமையில் நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மீனவ மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் ஜனவரி மாதத்தில் மீனவ மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறைவாரியான பதில்கள், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. இதில் பிற துறையை சார்ந்த 26 மனுக்களும், மீ;ன்வளத்துறையை சார்ந்த 11 மனுக்களும், தனிநபர் மனுக்கள் 16 என மொத்தம் 53 மனுக்கள் மீது பதில்கள் வாசிக்கப்பட்டது. நமது மாவட்டத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை முன்னிட்டு, குடிநீர் சம்பந்தமான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே ஊராட்சி ஒன்றியத்தின் நிதிநிலைமை அடிப்படையில் சாலைகள் செப்பனிட விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகப் பணிகள் முடிவுறும் தருவாயில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்துத் தரப்படும் எனவும், முட்டம் ஊராட்சி பகுதியினை சுற்றுலா மையமாக மேம்பாடு செய்யும் பொருட்டு, மத்திய அரசு மூலம் தற்போது ரூ. 65 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கடற்கரை பகுதியில் தடுப்பு வேலி அமைக்கவும், கழிவறைகள் பராமரிக்கவும் ஊராட்சி மூலம் செய்ய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது

 

பின்னர், மீனவர் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ ற்றுக் கொண்டார். கூட்டத்தில் துணை இயக்குநர் (மீன்வளத்துறை) லாமக் ஜெயக்குமார், உதவி இயக்குநர் நாபிராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மீனவ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்