எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1992-ஆம் ஆரம்பிக்கப்பட்ட, சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி, இந்த ஆண்டு இருபத்தி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி வெள்ளி விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பாரதியார் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட, ஈரோடு மாவட்ட கல்லூரிகளில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இருபாலர்களும் பயிலும் சுயநிதிக் கல்லூரி என்ற பெருமைக்குரியது, சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.1992-ஆம் ஆண்டு 3 பாடப்பிரிவுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது 17 இளநிலை பாடப்பிரிவுகளையும், 8 முதுகலைப் பாடப்பிரிவுகளையும், 2 பட்டய ஆராய்ச்சி பாடப் பிரிவுகளையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. வெள்ளி விழா ஆண்டினை ஒட்டி ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஏர்லைன் கேட்டரிங் மேனேஜ்மென்ட் என்ற துறையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் பயன்பெற கல்லூரி நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.
வெள்ளிவிழா மலர்
இவ்விழாவினை, ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர், டி ஜெயலட்சுமி தலைமையேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், கலந்து கொண்டார். வெள்ளி விழாவில் ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை, டாக்டர் ஈ.கே.சகாதேவன் இயக்குநர், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்களை சேன் கட்டிடக்கலை கல்வி நிறுவனம் செயலாளர் டி கிரி, மற்றும். ஈரோடு, ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிர்வாக இயக்குநா பாலகுமார், ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள். கல்லூரி முதல்வர் பங்கேற்று, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வெள்ளி விழாவையொட்டி வேளாளர் கல்லூரி தாளாளர்சந்திரசேகர், வெள்ளிவிழா மலரினை வெளியிட, லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர்சகாதேவன் பெற்றுக் கொண்டார்
பல்கலைக்கழகமாக விளங்கும்
வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர், சந்திரசேகர், ஈரோடு பேசுகையில், ஸ்ரீ அம்மன் கல்லூரியின் தாளாளர் தனியொரு பெண்மணியாக இந்த கல்லூரியை ஆரம்பித்து, தற்போது வெள்ளி விழா காண செய்துள்ளார். தாயுள்ளம் படைத்தவர். செய்நன்றி மறவாதவர், பல ஏழை மாணவர்களுக்கு பிறர் அறியாது இலவச கல்வி வழங்கி வருகிறார். வெள்ளிவிழா கண்ட அம்மன் கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக விளங்கும் என கூறினார்.
சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் பங்கேற்றஈரோடு h லோட்டஸ் மருத்துவமனை, , சகாதேவன், இயக்குநர் பேசுகையில், நாம் பிறக்கும் போது எதுவும் கொண்டுவருவதில்லை. நம் கடின உழைப்பால் மட்டுமே அனைத்தையும் பெற முடியும். ஸ்ரீ அம்மன் கல்லூரியின் தாளாளர் ஜெயலட்சுமி கடின உழைப்பால் தான் முன்னேறியிருக்கிறார். கல்லூரியின் தாளாளரை உதாரணமாக கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் என கூறினார். கடவுள் நமக்கு அளித்தவற்றைக் கொண்டு இன்பமுற வாழ வேண்டும் எனவும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறியதைப் போல் பொது அறிவியல் கல்வியுடன், உணர்ச்சியை கையாளுதல் மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவற்றையும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், தனி மனிதர்கள் சமுதாயத்திற்கு பங்காற்ற வேண்டுமென்றும், இதையெல்லாம் பயின்று சென்றால் பல்வேறு நாடுகளில் பல்துறை சார்ந்த தொழில்களிலும் நம் தமிழ்நாட்டின் அரசியலிலும் சிறந்த பங்காற்றலாம் என கூறினார்
தாயுள்ளம் படைத்த தாளாளார்
அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பேரவையின் தலைவர். முகமது இம்ரான் பேசுகையில், கல்லூரியின் தாளாளர் அவர்களின், வளர்ச்சிக்கு அவர்களது தன்னம்பிக்கையும், மன வலிமையும், விடா முயற்சியுமே காரணம் என கூறி வெள்ளி விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பிறகு, அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், கன்னியாகுமரி குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமாகிய அப்துல் சலாம் 1995-ம் ஆண்டு நான் இக்கல்லூரியில் உயர்கல்வி படிப்பதற்காக சேர்ந்தேன். என் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு நமது தாளாளர் என்னை கல்லூரியில் இலவசமாக படிக்க வைத்தார் என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், தாயுள்ளம் படைத்த தாளாளர் பல மாணவர்களை கட்டணமின்றி படிக்க வைத்து வருகிறார் எனவும் கூறினார்.அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், பேரவையின் செயலாளரும் அவிவா லைப் இன்ஸ்சூரன்ஸ்ஸின் பயிற்சியாளருமான செந்தில் ராஜா நம் கல்லூரி வெள்ளி விழா காண்பது மகிழ்ச்சி அளிக்கிறதென்று கூறி, முன்னாள் மாணவர்கள் “ஆசை” அமைப்பின் சார்பாக வெள்ளி விழா அரங்கம் கட்ட ரூ.40,000 முன்பணமாக வழங்கினார்..
பொன்விழா காண வாழ்த்துகிறோம்
ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மற்றும் அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவர் மக்கள் ஜி ராஜன், பேசுகையில, வெள்ளிவிழா காண்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பொன்விழா காண எங்கள் முன்னாள் மாணவர் அமைப்பு “ஆசை” சார்பாக வாழ்த்துகிறோம் எனவும் கூறினார்.இவ்விழாவில், கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய முன்னாள் முதல்வர்கள், பேராசியர்கள், வழக்கறிஞர் அருட்செல்வன், யாழி. மதிவாணன, தாளாளர் செங்குந்தர் பொறியியல் கல்லூரி ஈரோடு. சாந்தலட்சுமி- செகரட்ரியேட், மருத்துவர் சரோஜா துரைராஜ், முனைவர் சாந்தகுமாரி, அருட்சகோதரி. ரீனா, ஆடிட்டர் துரைசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு வெள்ளி விழாவினைச் சிறப்பித்தனர்.கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் இறுதியில், சிறப்பாக அமைய உதவிய அனைவருக்கும் மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர். எ ராஜேஷ் நன்றியுரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ அம்மன் கல்லூரியின் முதல்வர் .எம். சதீஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.(
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...