எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1992-ஆம் ஆரம்பிக்கப்பட்ட, சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி, இந்த ஆண்டு இருபத்தி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி வெள்ளி விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பாரதியார் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட, ஈரோடு மாவட்ட கல்லூரிகளில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இருபாலர்களும் பயிலும் சுயநிதிக் கல்லூரி என்ற பெருமைக்குரியது, சித்தோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.1992-ஆம் ஆண்டு 3 பாடப்பிரிவுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது 17 இளநிலை பாடப்பிரிவுகளையும், 8 முதுகலைப் பாடப்பிரிவுகளையும், 2 பட்டய ஆராய்ச்சி பாடப் பிரிவுகளையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. வெள்ளி விழா ஆண்டினை ஒட்டி ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஏர்லைன் கேட்டரிங் மேனேஜ்மென்ட் என்ற துறையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் பயன்பெற கல்லூரி நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.
வெள்ளிவிழா மலர்
இவ்விழாவினை, ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர், டி ஜெயலட்சுமி தலைமையேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்கள் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், கலந்து கொண்டார். வெள்ளி விழாவில் ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை, டாக்டர் ஈ.கே.சகாதேவன் இயக்குநர், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்களை சேன் கட்டிடக்கலை கல்வி நிறுவனம் செயலாளர் டி கிரி, மற்றும். ஈரோடு, ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிர்வாக இயக்குநா பாலகுமார், ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்கள். கல்லூரி முதல்வர் பங்கேற்று, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வெள்ளி விழாவையொட்டி வேளாளர் கல்லூரி தாளாளர்சந்திரசேகர், வெள்ளிவிழா மலரினை வெளியிட, லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர்சகாதேவன் பெற்றுக் கொண்டார்
பல்கலைக்கழகமாக விளங்கும்
வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர், சந்திரசேகர், ஈரோடு பேசுகையில், ஸ்ரீ அம்மன் கல்லூரியின் தாளாளர் தனியொரு பெண்மணியாக இந்த கல்லூரியை ஆரம்பித்து, தற்போது வெள்ளி விழா காண செய்துள்ளார். தாயுள்ளம் படைத்தவர். செய்நன்றி மறவாதவர், பல ஏழை மாணவர்களுக்கு பிறர் அறியாது இலவச கல்வி வழங்கி வருகிறார். வெள்ளிவிழா கண்ட அம்மன் கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக விளங்கும் என கூறினார்.
சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் பங்கேற்றஈரோடு h லோட்டஸ் மருத்துவமனை, , சகாதேவன், இயக்குநர் பேசுகையில், நாம் பிறக்கும் போது எதுவும் கொண்டுவருவதில்லை. நம் கடின உழைப்பால் மட்டுமே அனைத்தையும் பெற முடியும். ஸ்ரீ அம்மன் கல்லூரியின் தாளாளர் ஜெயலட்சுமி கடின உழைப்பால் தான் முன்னேறியிருக்கிறார். கல்லூரியின் தாளாளரை உதாரணமாக கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம் என கூறினார். கடவுள் நமக்கு அளித்தவற்றைக் கொண்டு இன்பமுற வாழ வேண்டும் எனவும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறியதைப் போல் பொது அறிவியல் கல்வியுடன், உணர்ச்சியை கையாளுதல் மற்றும் ஆன்மீக அறிவு ஆகியவற்றையும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், தனி மனிதர்கள் சமுதாயத்திற்கு பங்காற்ற வேண்டுமென்றும், இதையெல்லாம் பயின்று சென்றால் பல்வேறு நாடுகளில் பல்துறை சார்ந்த தொழில்களிலும் நம் தமிழ்நாட்டின் அரசியலிலும் சிறந்த பங்காற்றலாம் என கூறினார்
தாயுள்ளம் படைத்த தாளாளார்
அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பேரவையின் தலைவர். முகமது இம்ரான் பேசுகையில், கல்லூரியின் தாளாளர் அவர்களின், வளர்ச்சிக்கு அவர்களது தன்னம்பிக்கையும், மன வலிமையும், விடா முயற்சியுமே காரணம் என கூறி வெள்ளி விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பிறகு, அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், கன்னியாகுமரி குழித்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமாகிய அப்துல் சலாம் 1995-ம் ஆண்டு நான் இக்கல்லூரியில் உயர்கல்வி படிப்பதற்காக சேர்ந்தேன். என் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு நமது தாளாளர் என்னை கல்லூரியில் இலவசமாக படிக்க வைத்தார் என நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், தாயுள்ளம் படைத்த தாளாளர் பல மாணவர்களை கட்டணமின்றி படிக்க வைத்து வருகிறார் எனவும் கூறினார்.அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவரும், பேரவையின் செயலாளரும் அவிவா லைப் இன்ஸ்சூரன்ஸ்ஸின் பயிற்சியாளருமான செந்தில் ராஜா நம் கல்லூரி வெள்ளி விழா காண்பது மகிழ்ச்சி அளிக்கிறதென்று கூறி, முன்னாள் மாணவர்கள் “ஆசை” அமைப்பின் சார்பாக வெள்ளி விழா அரங்கம் கட்ட ரூ.40,000 முன்பணமாக வழங்கினார்..
பொன்விழா காண வாழ்த்துகிறோம்
ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மற்றும் அம்மன் கல்லூரியின் முன்னாள் மாணவர் மக்கள் ஜி ராஜன், பேசுகையில, வெள்ளிவிழா காண்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பொன்விழா காண எங்கள் முன்னாள் மாணவர் அமைப்பு “ஆசை” சார்பாக வாழ்த்துகிறோம் எனவும் கூறினார்.இவ்விழாவில், கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய முன்னாள் முதல்வர்கள், பேராசியர்கள், வழக்கறிஞர் அருட்செல்வன், யாழி. மதிவாணன, தாளாளர் செங்குந்தர் பொறியியல் கல்லூரி ஈரோடு. சாந்தலட்சுமி- செகரட்ரியேட், மருத்துவர் சரோஜா துரைராஜ், முனைவர் சாந்தகுமாரி, அருட்சகோதரி. ரீனா, ஆடிட்டர் துரைசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு வெள்ளி விழாவினைச் சிறப்பித்தனர்.கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் இறுதியில், சிறப்பாக அமைய உதவிய அனைவருக்கும் மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர். எ ராஜேஷ் நன்றியுரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ அம்மன் கல்லூரியின் முதல்வர் .எம். சதீஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.(
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.