முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை பாவனா பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      சினிமா
Image Unavailable

எர்ணாகுளம்   - நடிகர் பாவனாவின் காருக்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கேரள காவல்துறையினர், பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநர் ஒருவரை கைது செய்தனர்.  இது தொடர்பாக கேரள போலீஸ் மற்றும் மலையாள செய்தி ஊடகங்கள் தரப்பில் கூறப்படுவதாவது: எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில் நள்ளிரவுக்குப் பின் பாவனா காரில் சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், அவரது காருக்குள் புகுந்தது.

பாவனாவுக்கு பாலியல்  கொடுமை :
பாலாரிவட்டம் எனும் இடம் வரை, காருக்குள் பாவனாவை பாலியல் ரீதியில் துன்புறுத்தியிருக்கின்றனர்.  இது தொடர்பாக பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் என்பவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தன் காருக்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில், தன்னிடம் முன்னர் பணிபுரிந்த கார் ஓட்டுநர் ஒருவரும் அடங்குவார் என்று போலீஸிடம் பாவனா தெரிவித்துள்ளார்.

புகைப்படம்- வீடியோ எடுத்தனர் :
காருக்குள் பாவனாவை துன்புறுத்தியதுடன், அந்தக் காட்சிகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் அந்த மர்ம கும்பல் படம் பிடித்துள்ளது. பாலாரிவட்டம் பகுதியை அடைந்தபோது, காரில் இருந்து அந்த கும்பல் இறங்கி வேறொரு காரில் தப்பிச் சென்றது. பின்னர், கக்கநாடில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டில் பாவனா அடைக்கலம் ஆனார். தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், அங்கு வந்த போலீஸார், பாவனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களில் முக்கியமான ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்