முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை அருகே அம்மா திட்ட முகாம்:52 பே ருக்கு நலத்திட்ட உதவிகள்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை அருகே நடந்த அம்மா திட்ட முகாமில் 52 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் எஸ்.ரவி வழங்கினார்.திருவண்ணாமலை வட்டம் பழையனூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் எஸ்.ரவி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கே.சரஸ்வதி, வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் முனுசாமி அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, பட்டா மாற்றம், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம்நு திருமண உதவித்தொகைநு இலவச வீட்டுமனை பட்டா உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 196 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 பேருக்கு பட்டா மாற்றம் செய்தும்நு 47 பேருக்கு ரேஷன் கார்டில் பெயர் நீக்கல் சேர்த்தல் செய்தும் மொத்தம் 52 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் எஸ்.ரவி வழங்கினார்.முகாமில் மண்டல துணை தாசில்தார் அமுல், அதிமுக பிரமுகர்கள் திருமுருகன், லட்சுமி நாராயணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராகுல், இளையராஜா, பாலகிருஷ்ணன், மாதவன், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வி.ஏ.ஓ. ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்