முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் : மருத்துவமனை கண்காணிப்பாளர் லட்சுமி தகவல்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      திருச்சி

திருச்சி மாவட்டம் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் காலியாக உள்ள ஒரு சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.லட்சுமி தெரிவித்துள்ளார்.

 

காலியிடம்

 

 

06.03.2017 அன்று காலை 10.00 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. பொது பிரிவு, பொது (முன்னுரிமை) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதியாக எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். ஊதிய தொகையாக ரூ.4800-10000தர ஊதியம் ரூ.1300 வழங்கப்படும்.

விண்ணப்பங்களை (ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு) பெயர், விவாசம், வயது, சாதிச் சான்றிதழ், முன்னுரிமைக்கான ( ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத் திருமணம் மற்றும் பிற) சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் உரிய சுய சான்றொப்பத்துடன் 02.03.2017ம் தேதிக்குள் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, மிளகுபாறை, திருச்சி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0431 – 2417823, 2417826 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.லட்சுமி தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்