முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷேர் ஆட்டோ மீது டவுன்பஸ் மோதல்: 3பேர் உடல்நசுங்கி பலி:

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-திருமங்கலம் அருகே ஷேர் ஆட்டோ மீது டவுன்பஸ் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி கிராமத்திலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு டவுன்பஸ் சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்து முனியாண்டிபுரம் கிராமத்திற்கு அருகே வந்த போது எதிரில் தென்னமநல்லூரை நோக்கி

சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.இந்த கோர விபத்தில் ஷேர்ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.இதில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தென்னமநல்லூரைச் சேர்ந்த கண்ணம்மாள்(52),குருவம்மாள்(55) ஆகிய இரு பெண்களும் ராஜபாண்டி(17) ஆகிய 3பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாமடைந்த பாண்டியம்மாள்,வேடத்தி,சுகன்யா ஆகிய 3பேர் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து தகவலறிந்த வில்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இருபெண்கள் உள்ளிட்ட 3பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்