முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் அருகே பயங்கரம் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சுட்டுக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு கிராமத்தைச் சேர்ந்தவர் சேஷாத்திரி (40). விவசாயி. இவருக்கு திருமணமாகி எல்லம்மா என்ற மனைவியும், ராமன், லட்சுமணன் என்ற 2 மகன்களும் உள்ளனர். இரட்டையர்கள். 8ம் வகுப்பு படித்து வருகிறார்கள். சேஷாத்திரிக்கு சொந்தமான நிலம் உப்பரத்தமண்டரப்பள்ளி அருகில் உள்ளது. அங்கு கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு சேஷாத்திரி தனது மோட்டார் சைக்கிளில் உப்பரத்தமண்டரப்பள்ளி செல்லும் பாதையில் உள்ள தனது கொட்டகைக்கு சென்றார். ஆனால் அவர் நேற்று காலை வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி பார்த்தனர். அப்போது கொட்டகைக்கு செல்லும் வழியில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சேஷாத்திரி பிணமாக கிடந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சவுந்தரராஜன், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம், மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள். கொலையுண்ட சேஷாத்திரியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலையுண்ட இடத்தில் ரத்த துளிகள் காணப்பட்டன. மேலும் சேஷாத்திரியின் செல்போன் கீழே கிடந்தது.இதைத் தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2015&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12&ம் தேதி சேஷாத்திரி இந்த கொட்கையில் தூங்கிய போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது குண்டுகள் பாய்ந்து உயிர் பிழைத்த சேஷாத்திரி அது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்திருந்தார்.அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் குற்றவாளிகள் பிடிபடவில்லை. இந்த நிலையில் தற்போது மர்ம நபர்கள் அவரை சுட்டு கொன்றது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் ஓசூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்