முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால்குடி எல்.அபிஷேகபுரத்தில் நடந்தஜல்லிக்கட்டில் சீறிபாய்ந்த காளைகள் 20 ஆயிரம் கண்டு களித்தனர்:கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      திருச்சி
Image Unavailable

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், எல்.அபிஷேகபுரத்தில் நேற்று காலை 9.00 மணி அளவில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார் ஆகியோhர் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி நடைபெறுகிறதா என நேரில் பார்வையிட்டார்கள். ஜல்லிக்கட்டில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 361 காளைகள் பங்கேற்றது. இதில் 356 காளைகள் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட்டது. 5 காளைகள் மருத்துவ பரிசோதனையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறையின் மருத்துவக்குழுவினர் அனைத்துக் காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை அடக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க்க அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனைக்குப் பின்னர் 580 வீரர்கள் சீருடைகளுடன், காளைகளை அடக்க களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். விதிகளை பின்பற்றாத 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.காளைகள் ஒவ்வொன்றாக வாடி வாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டது. களம் இறங்கிய பல காளைகளுடன் வாலிபர்கள் களத்தில் நீண்ட நேரம் நின்று சீறி வந்த காளைகளை அடக்கினார்கள். இதில் காளைகளை அடக்கும் போது 12 வீரர்களுக்கு மட்டும் காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பபட்டனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் மற்றும் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகளாக மோட்டார் சைக்கிள், சைக்கிள், தங்ககாசுகள், வெள்ளிகாசுகள், ஸ்டீல்பிரோ, ஸ்டீல்கட்டில், அயன்பாக்ஸ், குக்கர், பேன், சேர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. எல்.அபிஸேகபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழக அரசு விதித்த விதிகளின்படி ஜல்லிக்கட்டு மிக சிறப்பாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர்(பொ) மணிவண்ணன், இலால்குடி வட்டாட்சியர் ஜவஹர்லால் நேரு, மாநில ஜல்லிக்கட்டு பேரவையின் துணைத்தலைவர் பி.ராஜசேகரன், வருவாய்த்துறை, விலங்குகள் நலவாரிய பிரதிநிதிகள், பொதுப்பணிதுறை, தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் விழா குழுவினர்கள் மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்