முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் குரூப்_1 தேர்வு 394 பேர் எழுதினர்

ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2017      நீலகிரி

ஊட்டியில் நேற்று நடைபெற்ற குரூப்_1 தேர்வினை 356 பேர் எழுதினர்.

                       356 பேர் ஆப்சென்ட்

த•ழகம் முழுவதும் த•ழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்_1 தேர்வுகள் நேற்று நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டத்தில் தேர்வு எழுத 750 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற இத்தேர்வில் 394 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். மீதமுள்ள 356 பேர் தேர்வு எழுத வரவில்லை.

                             கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், கோட்டாட்சியர் கார்த்திகேயன், கல்லூரி முதல்வர் சுந்தரவல்லி ஆகியோர் உடனிருந்தனர்.

தேர்வு நடைபெற்ற இடத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கம் வகையில் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்