முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் 8,50,520 நபர்கள் வாக்காளர்களாக பட்டியலில் உள்ளனர் : கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 134-அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று (20.02.2017) வெளியிட்டார்.

 

வாக்காளர் பட்டியல்

 

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் 2017ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி 134-அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 97100 ஆண் வாக்காளர்களும், 103247 பெண் வாக்காளர்களும், மொத்தம் 200347 வாக்காளர்களும், 135-கரூர் சட்டமன்ற தொகுதியில் 111515 ஆண் வாக்காளர்களும், 121593 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும், மொத்தம் 233110 வாக்காளர்களும், 136-கிரு~;ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 100184 ஆண் வாக்காளர்களும், 104363 பெண் வாக்காளர்களும், 41 இதர வாக்காளர்களும், மொத்தம் 204588 வாக்காளர்களும், 137-குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 104490 ஆண் வாக்காளர்களும், 107983 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும், மொத்தம் 212475 வாக்காளர்களும், என மொத்தம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 4,13,289 ஆண் வாக்காளர்களும், 4,37,186 பெண் வாக்காளர்களும், 45 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 8,50,520 வாக்காளர்களும் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், 1.1.2017 அன்று 18 வயது நிறைவடைந்த வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலம். 20.02.2017 முதல் 06.03.2017 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர், அரவக்குறிச்சி மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கோட்டாட்சியர், கரூர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 25.02.2017 சனிக்கிழமை அன்று கிராம சபையில் வைக்கப்படும். 26.02.2017 மற்றும் 05.03.2017 ஆகிய இரு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம் நாட்களிலும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்களிடம் மனுக்களை அளிக்கலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட இணையதள மையங்களிலும் மனுக்களை இணையதளம் மூலம் அளிக்கலாம். மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 16.03.2017 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகா~;, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.சிவப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வட்டாட்சியர்கள் சக்திவேல், துரைமுருகன், அம்பாயிரநாதன், ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்