முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சங்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      நீலகிரி

 

ஊட்டியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

87 மனுக்கள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடனுதவி,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 87 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தவிட்டார்.

5 தேய்ப்பு பெட்டி

மேலும் கடந்த கூட்டங்களின் போது பெறப்பட்ட நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

 

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டிகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் பரமசிவம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரத்தினம், உதவி ஆணையர் கலால் முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மகபூப் பாட்ஷா அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்