முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 - 2ல் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

மதுரை. -மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 மற்றும் மண்டலம் எண்.2 அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் துணை ஆணையாளர் செ.சாந்தி   தலைமையில்   நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 அலுவலகத்தில் காலை  10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 28 மனுக்களும், மண்டலம் எண்.2 அலுவலகத்தில் மாலை 4.00 மணி முதல் 6.00 வரை நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைதீhக்கும் முகாமில் 20 மனுக்களும் என மொத்தம் 48 மனுக்கள் பொது மக்களிடமிருந்து துணை ஆணையாளர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.

எதிர்வரும் 24.02.2017 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மண்டலம் எண்.3 அலுவலகத்திலும், மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மண்டலம் எண்.4 அலுவலகத்திலும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 இந்த குறைதீர்க்கும்முகாமில் உதவி ஆணையாளர்கள்  கௌசலாம்பிகை, திரு.பழனிச்சாமி,  மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், செயற்பொறியாளர்; திரு.ராஜேந்திரன், உதவி ஆணையாளர் (வருவாய்)  ரெங்கராஜன், உதவி செயற்பொறியாளர் திரு.முருகேச பாண்டியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்