முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்னூர் நகராட்சி பகுதியில் சாந்தி ராமு எம்.எல்.ஏ மக்களிடம் குறை கேட்டார்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      நீலகிரி

 

குன்னூர் நகராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு பொதுமக்களிடம் குறை கேட்டார்.

 

 

குடிநீர் பிரச்சனை

 

 

குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ஏ.ராமு நேற்று குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளுக்கும் சென்று அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். அப்போது வண்டிச்சோலை பகுதிக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து அவர்களிடம் குடிநீர் பிரச்சனையை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் உடனடியாக தண்ணீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.

 

சட்டமன்ற உறுப்பினருடன் அ.தி.மு.கபேரவை மாவட்ட செயலாளர் எஸ்.கலைச்செல்வன், நகர கழக செயலாளர் சரவணகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் சத்தார், சையது முபாரக், யோகேஸ் கண்ணன், கோத்தகிரி வடிவேல், சக்கத்தா சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்