முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மது கடத்தலில் பறிமுதலான வாகனங்கள் ரூ. 2.69 லட்சத்துக்கு ஏலம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      ஈரோடு

 

ஈரோடு மாவட்டத்தில் மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ. 2.69 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.

 

ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில், மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 4 நான்கு சக்கர வாகனங்கள், 9 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

 

இந்த ஏலத்தை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தொடக்கி வைத்தார். மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜவேல் தலைமை வகித்தார். இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 1,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் முன் பணமாகச் செலுத்தப்பட்டு 27 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். இதில், இருசக்கர வாகனங்கள் 3, நான்கு சக்கர வாகனங்கள் 2 என மொத்தம் 5 வாகனங்கள் மட்டும் ரூ. 2 லட்சத்து 69 ஆயிரத்து 13-க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்