முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு.

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-  இலங்கை கடற்படையினரால் கைது செய்ய்ப்பட்டு சிறையிலிருக்கும் ராமேசுவம் மீனவர்கள் 10 பேருக்கு இரண்டாவது முறையாக சிறைக்காவலை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவியிட்டது.

  ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அத்தனாஸ்,அருண்ஜார்ஜ்,முத்துமுருகன்,செல்வம்,அர்ச்சுனன்,அந்தோணி எடிசன்,அருண்,ராசு,முனியசாமி,கிளாரன் ஆகிய 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் மீனவர்கள் 10 பேரையும் இலங்கை கடற்படையினர் விசாரணை செய்து  ஊர்க்காவல்துறை போலீஸாரிடம்  ஒப்படைத்தனர்.அங்கு மீனவர்கள் போலீஸார் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.அங்கு மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி சபேசன் நேற்று வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.அதன் பேரில் மீனவர்கள் 10 பேரையும் போலீஸார் யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்போரில் போலீஸார் மீனவர்கள் 10 போரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அங்கு இவ்வழக்கு குறித்து இலங்கை கடற்படையினர் போதுமான ஆவணங்களை ஒப்படைக்கபடவில்லை.இதனால் இவ்வழக்கு குறித்து  விசாரணை செய்த நீதிபதி சபேசன் மீனவர்கள் 10 பேரையும் மார்ச் 7 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க இரண்டாவது முறையாக  உத்தரவுயிட்டார்.அதன் பின்னர் போலீஸார் மீனவர்களை  யாழ்பாணம் சிறையில்  மீண்டும் அடைத்தனர்.                                             

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்