முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடம்பூர் மலைப்பகுதியில் காட்டுத் தீயால் பரபரப்பு

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      ஈரோடு

கடம்பூர் மலைப்பகுதியில், திடீர் காட்டுத்தீயால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உட்பட்ட, கடம்பூர் மலைப்பகுதியில் கம்பத்ராயன்கிரி என்ற இடம் உள்ளது. இங்கு நேற்று மாலை, 630 மணியளவில் திடீரென காட்டுத்தீ பற்றியது. காற்றினால் மளமளவென பரவியது. இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து, வனத் துறையினருடன் சேர்ந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வறட்சியால் செடி, கொடிகள் ஏற்கனவே காய்ந்து, சருகாக இருப்பதால், தீயின் தாக்கம், வேகம் அதிகமாக உள்ளது. இரண்டு மணி நேரத்தில், ஒன்றரை ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி எரிந்து நாசமாகி விட்டதாக, வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, விடுவோம் என்று, இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்