எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.கவினர் சட்டசபையில் வன்முறையில் ஈடுபட்டனர் என்று அ.தி.மு.க செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களை வெளியேற்றி, சபாநாயகர் ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கலவரத்தை உருவாக்குகிறது
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசியலில் திட்டமிட்டு தி.மு.க. குழப்பம், கலவரத்தை உருவாக்கி வருகிறது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சபையை ஒத்திவைத்து பின்னர் ஒரு நாளில் நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இரண்டு பிரச்னைகளை தி.மு.கவினர் சட்டசபையின் முன் வைத்தார்கள். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டியது தானே இதில் என்ன தயக்கம் என்று நினைக்க தோன்றும், ஆனால் ஏன் ரகசிய வாக்கெடுப்பு தவிர்க்கப்பட்டது என்பதற்கு நியாயங்கள் பல இருந்தாலும் ரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு விரோதமானது.
சட்டத்துக்கு எதிரானது
ரகசிய வாக்கெடுப்பு கோருவது சட்டத்துக்கு எதிரானது. கட்சி தாவல் சட்டத்துக்கு எதிரானது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தும் போது அவர்கள் மாற்றி ஓட்டு போட்டால் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது? சட்டத்தில் இடம் இல்லாததால் தான் தி.மு.க.வின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கிறார். மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கொடுத்திருக்கிறார். காலம் தாழ்த்தாமல் 2 நாளில் நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தறிந்து சிந்தித்து ஓட்டு போட வேண்டும். இதற்காக சட்டசபையை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. அப்படியே சட்டமன்ற உறுப்பினர்களை ஆங்காங்கே தொகுதிக்கு சென்று விட்டு அவர்களை திரும்ப விடாமல் செய்தால் என்ன செய்வது? எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் 80 சட்டமன்ற
உறுப்பினர்களை கடத்தி சென்று விட்டால் என்ன செய்வது?
வெளியேற்றம் ஏன்?
தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இது சரியா என்று கேட்கிறார்கள். சட்டசபையில் 74 உறுப்பினர்கள் இருந்தாலே தீர்மானம் நிறைவேற்ற முடியும். சட்டசபையில் கோரம் இல்லாவிட்டால் தான் நிறைவேற்ற முடியாது. சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்ட விரோதமாக நடக்கிறார்கள். ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடம் இல்லை. இதனைத் தான் சபாநாயகர் சொன்னார். சட்டசபையை ஒத்தி வைப்பதும், ஒத்தி வைக்காததும் சபாநாயகரின் உரிமை. சபாநாயகரின் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்யலாம். வெளிநடப்பு செய்வது தான் தி.மு.க.விற்கு கை வந்த கலையாயிற்றே? சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தான் சபாநாயகர் வெளியேற்றினார். சட்டசபையை நடத்தவிடாமல் செய்ததால் தி.மு.கவை வெளியேற்றினார். அது அவருடைய உரிமை. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களை வெளிநடப்பு தானே செய்தார்கள். தி.மு.க.வினர் கலவரம் செய்ததால் தான் வெளியேற்றப்பட்டார்கள்.
ஆட்சியை கவிழ்க்க...
இப்போது சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொடுத்திருக்கிறார்கள். நம்பிக்கை தீர்மானம் சட்டசபையில் வரும்போது தி.மு.க.வின் நிலை பற்றி ஸ்டாலின் என்ன சென்னார். தீர்மானத்தில் நடுநிலை வகிப்போம் என்றார். மறுநாள் இதனை எதிர்ப்போம் என்றார். என்ன காரணம்? அ. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மாற்றி விடலாம். ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று தி.மு.க. நினைத்து தங்கள் நிலையை மாற்றிக்கொண்டார்கள். ஆட்சி கவிழ்ப்பு மட்டும் தான் தி.மு.க.வின் ஒரே நோக்கம். எனவே தான் சட்டசபையை நடத்த விடாமல் கலாட்டா செய்தனர். கவர்னரிடம் சென்றார்கள். ஜனாதிபதியை சந்திக்க போகிறோம் என்றார்கள். நம்பிக்கை தீர்மானம் செல்லாது என்று கோர்ட்டுக்கு போகிறார்கள். நம்பிக்கை தீர்மானம் செல்லாது என்று யாராவது சொல்வார்களா என்று பார்க்கிறார்கள். இப்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இளைஞர்கள், மாணவர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். எப்படியாவது ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தி.மு.க. இருக்கிறது.
அழிவை நோக்கி ...
சபாநாயகரை தி.மு.க எதிர்ப்பது சரி. அவரை பிடித்து தள்ளினால் என்ன பொருள். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து பார்த்தால் அதன் வலி தெரியும், சபாநாயகர், தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீது கைவைத்து தள்ளுகிறார்கள். அதனால் தான் அனாவசியமாக துச்சமாக நினைத்து தள்ளுகிறார்கள், சபாநாயகர் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டு ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கிறார். தி.மு.க ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். இப்படி எதிர்ப்பது அவர்கள் அழிவை நோக்கி செல்கிறார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை மிரட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சபாநாயகர் தலையிட முடியாது. வெளியில் நடைபெறும் சம்பவங்களுக்கு அவர் பொறுப்பல்ல இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க