எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே : இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்றுதொடங்குகிறது. தொடர்ந்து 6 டெஸ்ட் தொடரை கைப்பற்றிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 7-வது டெஸ்ட் தொடரை வெல்லுமா என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்குகிறது.
தொடர் வெற்றிகள்...
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இலங்கை (2-1), தென்னாப்பிரிக்கா (3-0), வெஸ்ட் இண்டீஸ் (2-0), நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்காளதேசம் (1-0) ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் தொடரை வென்றது. மீதியுள்ள 4 தொடர் சொந்தமண்ணில் கைப்பற்றப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 7-வது டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக வெல்லும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.
ஃபார்மில் கோலி...
இந்திய அணி கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலேயில் நடந்த டெஸ்டில் இலங்கையிடம் 63 ரன்னில் தோற்றது. அதன்பிறகு விளையாடிய 19 டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. இதில் 15 டெஸ்டில் வெற்றி பெற்றது. 4 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. தோல்வியை சந்திக்காமல் விளையாடி வரும் இந்திய அணியின் சாதனை ஆஸ்திரேலிய தொடரிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவரது ரன் குவிப்பில் இந்திய அணி டெஸ்டில் சமீபகாலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இரட்டை சதம்
வங்காளதேசத்துக்கு எதிராக ‘இரட்டை சதம்’ (204 ரன்) அடித்ததன் மூலம் அவர் புதிய வரலாறு படைத்தார். 4 டெஸ்ட் தொடர்களில் நான்கு இரட்டை சதம் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் வெஸ்ட் இண்டீஸ் (200), நியூசிலாந்து (211) , இங்கிலாந்துக்கு (235) எதிராகவும் இரட்டை சதம் அடித்து இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விராட் கோலி தனது அதிரடியை வெளிப்படுத்தும் வேட்கையில் உள்ளார். அந்த அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அவர் சவாலை சந்திக்கும் நிலையில் ஆட வேண்டி இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை ‘சிலெட்ஜிங்’ செய்து சீண்டினால் ஆக்ரோஷமாகி விடுவார்.
அஸ்வின் சாதனை
இதுதவிர தொடக்க வீரர்கள் ராகுல், முரளி விஜய், புஜாரா, ரகானே, விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின்- ஜடேஜா கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக விக்கெட்டுகளை அள்ளி குவித்த இந்த இருவரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அஸ்வின் வங்காளதேசத்துக்கு எதிராக 6 விக்கெட் எடுத்தார். இதன்மூலம் 250 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்தார். கேப்டன் கோலியின் எதிர் பார்ப்புக்கு உரிய வீரராக சென்னையை சேர்ந்த அஸ்வின் இருக்கிறார். இதுதவிர ஜெயந்த் யாதவ், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
சிறப்பான நிலையில் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கிறது. கேப்டன் சுமித், வார்னர், மார்ஷ் சகோதரர்கள், ஸ்டார்க், ஹாசல்வுட், நாதன் லயன், குவாஜா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். வார்னருடன், குவாஜா அல்லது ரென்ஷா தொடக்க வீரராக களம் இறக்கப் படலாம் என்று தெரிகிறது. அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே. பயிற்சி ஆட்டத்தில் அந்த அணி சிறப்பாக விளையாடியதால் இந்தியாவை நம்பிக்கையுடன் சந்திக்க தயாராகிவிட்டது. ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய கையோடு இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது என்பது ஆஸ்திரேலியாவுக்கு சவாலானதே.
ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2013-ம் ஆண்டு இந்தியா வந்தபோது 4 டெஸ்டிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. இந்த முறையாவது இந்தியாவை வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இரு அணி வீரர்கள் விவரம்:
இந்தியா:
விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், புஜாரா, ரகானே, ஹர்த்திக் பாண்டியா, விருத்திமான் சகா, அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கருண் நாயர், அபினவ் முகுந்த், குல்தீப் யாதவ்.
ஆஸ்திரேலியா:
ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், மிச்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல், மேத்யூவாடே, உஸ்மான் குவாஜா, ஆஸ்டன் அகர், ஜேக்சன்பேர்டு, ஹாசல்வுட், பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம், நாதன் லயன், ஸ்டீவ் ஒசிபி, மேட் ரென்ஷா, ஸ்டார்க், சுவிப்சன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.