முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.டி.ஓ வாகன சோதனை ஏர் ஹாரன்கள் அகற்றம்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      ஈரோடு

பெருந்துறையில், ஆர்.டி.ஓ வாகன சோதனையில், வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன. பெருந்துறை ஆர்.டி.ஓ வெங்கடேஷ் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜேந்திரன், முத்துசாமி ஆகியோர், பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விதிகளை மீறி, தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பக் கூடிய, ஏர்ஹாரன்களை அகற்றினர். இனிமேல், ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்களை பொருத்தக்கூடாது என்று, டிரைவர்களை எச்சரித்தனர். ஆனால், வாகனங் களுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை. சோதனையின் போது, 25 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்