முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் அனைத்து முடிவுகளுக்கும் மக்கள் ஆதரவாகவே உள்ளனர் - வெங்கையா நாயுடு

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரம் உள்ளிட்ட பிரதமர் மோடியின் அனைத்து முடிவுகளுக்கும் மக்கள் ஆதரவாகவே உள்ளனர் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

மக்கள் ஆதரவு

சமீபத்தில் மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த வெற்றி விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

காங். மீது குற்றச்சாட்டு

புழக்கத்திலிருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து முடிவுகளுக்கும் மக்கள் ஆதரவாகவே உள்ளனர். சமீபத்திய உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதே இதற்கு சாட்சி. எதிர்க்கட்சியினர்தான் அடிப்படை உண்மைகள் தெரியாமல் பேசி வருகின்றனர்.  காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத்தான் காங்கிரஸ் கட்சி பேசி வருகின்றது. இது அப்பகுதியில் தீவிரவாதம் வளரவே உதவும். 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என மக்களிடம் எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்