முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது காங்கிரஸ் வழக்கு தொடர முடிவு

சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

நகரி, திருப்பதி கோவிலுக்கு ரூ. 5 கோடி காணிக்கை செலுத்திய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது வழக்கு தொடர இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ஸ்ரீதர் ரெட்டி கூறியுள்ளார்.

ஏழுமலையானுக்கு காணிக்கை

தெலுங்கானா தனி மாநிலம் உருவானால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 5 கோடி நகை காணிக்கை தருவதாக தெலுங்கானா ராஷ் டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டிக் கொண்டார். தெலுங்கானா மாநி லம் உருவாகி முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி ஏற்றதும் அரசு சார்பில் திருப்பதி ஏழுமலையான் நகை காணிக்கைக்கு ரூ. 5 கோடியை ஒதுக்கீடு செய்தார். அந்த நகைகளை சமீபத்தில் திருப்பதியில் காணிக்கையாக செலுத்தினார்.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஸ்ரீதர் ரெட்டி கூறியதாவது:-

முதல்வர் சந்திரசேகர ராவ் தனது சொந்த வேண்டுதல்களை மக்கள் வரிப் பணத்தில் நிறைவேற்றி வருகிறார். பொது பணத்தில் இருந்து பழுதடைந்த கோவில்களை புதுப்பிக்கவும், வருமானம் இல்லாத கோவிலுக்கும் நிதி கொடுக்க வேண்டும்.ஆனால் பணக்கார கோவிலான திருப்பதிக்கு ரூ. 5 கோடி நகை காணிக்கை கொடுத்து உள்ளார். இது சட்டவிரோதம். மக்கள் பணத்தை சந்திரசேகர ராவ் சொந்த வேண்டுதலுக்காக செலவு செய்ததை எதிர்த்து ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார்.
இதேபோல கம்யூனிஸ்டு தலைவர் சாந்தவெங்கட் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்