முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுகவுடன் உறவு வைத்துக் கொண்டு அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ். அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      விழுப்புரம்
Image Unavailable

செஞ்சி,

செஞ்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளி அன்று நடைபெற்றுது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் தினகரன் பரிந்துரையின் பேரில்தான் பன்னீர்செல்வம் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து வந்தார் என கூறினார்.கூட்டத்திற்கு செஞ்சி ஒன்றிய செயலர் அ.கோவிந்தசாமி தலைமை வகித்தார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலரும் சட்டம், நீதிமன்றங்கள்,சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி வெ.ஏழுமலை, பேராசிரியர் தீரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது: 2001ம் ஆண்டு நானும், ஓ பி எஸ்ஸும் ஒன்றாகத்தான் அமைச்சரானோம். இன்று பன்னீர் செல்வம் யாரை குற்றம் சொல்கிறாரோ. அந்த சசிகலாவால்தான் பன்னீர் செல்வம் அடையாளம் காட்டப்பட்டு ஜெயலலிதா அமைச்சராக்கினார். பெரிய குளம் எம் பியாக தினகரன் இருந்தபோது டீக்கடை நடத்திவந்தவரை எம். எல். ஏ. சீட் வாங்கி கொடுத்தவர் இதே தினகரன்தான். பின்னர் முதல்வரானதும் சசிகலாவின் பரிந்துரையில்தான். 3 வது முதல்வராக சசிகலாவை வற்புறுத்தியபோது அதை பன்னீர் செல்வத்திற்கு வழங்கியதும் சசிகலாதான். இன்று ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறிய இவரேதான் அன்று ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்று சொன்னதும் இதே பன்னிர் செல்வம்தான். முதல்வராக இருந்தபோது இவர் குற்றம் சாட்டவில்லை. பொது செயலர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று சசிகலா காலில் விழுந்தது இதே பன்னீர் செல்வம், இன்று பதவி வெறியால் யார் காலில் வேண்டுமானாலும் விழ தயாராக உள்ளார். திமுகவை விரட்ட ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஆனால் இன்று  திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை அழிக்க நினைக்கிறார். சட்டமன்றத்தில் 2 மாதத்தில் திமுகவை தாக்கி பேசியுள்ளாரா..? ஜெயலலிதாவை விமர்சனம் செய்தபோது பதில் சொன்னாரா..? ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு வரும்போது திமுகவினர் எழுந்து நிற்கக்கூடமாட்டார்கள். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று பன்னீர் செல்வம் வரும் போது ஸ்டாலின் கைதட்டி வரவேற்கிறார். அப்படியெனில் இவருக்கும் திமுகவிற்கும் என்ன உறவு..? அதிமுக தொண்டன் பதவி வெறி பிடித்தவர்கள் அல்ல என்று அவர் பேசினார். அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அன்று சட்டசபையில் கலவரத்தைஏற்படுத்தி சட்டைய கிழித்து கொண்டு பதவி வெறி பிடித்து ஸ்டாலின் தெருதெருவாக ஓடுகிறார். திமுக ஒரு தீய சக்தி அதை அகற்ற எம்ஜிஆர் ஆரம்பித்தஇயக்கம்தான் அதிமுக. ஆனால் அதே திமுகவுடன் கள்ளஉறவு வைத்துக்கொண்டுஅதிமுகவை வீழ்த்திவிடலாம் என ஓபிஎஸ் நினைக்கின்றார்.நான் இல்லை என்றாலும் அதிமுக தொண்டன் இருக்கும் வரை அதிமுக ஆட்சிநூறாண்டு தொடர்ந்து இருந்து தமிழக மக்களுக்கு நல்லதை தொடர்ந்து செய்யும்என கடைசி சட்ட மன்ற கூட்ட தொடரில் ஜெயலலிதா பேசினார் என்பவரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என பேசினார்.கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலர்கள் கு.கண்ணன்,அ.கெளதம்சாகர், சையது அஜீஸ், நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலர் ஆர்.சரவணன்,மாவட்ட மாணவரணி துணை செயலர் ஜெ.கமலக்கண்ணன், இலக்கிய அணி வெங்கடேசன்,பா.திருமலை, ஆர்.அனுக்குமார் உள்ளிட்ட அதி்முகவினர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago