முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சி இந்தியன் வங்கி முன் பால் வியாபாரியிடம் ரூ 42 ஆயிரம் கொள்ளை

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      விழுப்புரம்

செஞ்சி,

 

செஞ்சி இந்தியன் வங்கி முன் பால் வியாபாரியை ஏமாற்றி ரூ 42 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.செஞ்சி வட்டம் ஆத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் பாஸ்கரன்(27) பால் வியாபாரியான இவர் திங்கள் அன்று திருவண்ணாமலை சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ 42 ஆயிரத்தை எடுத்துள்ளார். பணத்தை ஒரு பையில் போட்டு தனது மோட்டார் சைக்கிள் முன் உள்ள கவரில் வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டபோது அங்கிருந்த ஒரு நபர் பாஸ்கரை பார்த்து பணம் கீழே கிடப்பதாக கூறினார். உடனே பாஸ்கர் கீழே கிடந்த பணத்தை எடுக்க முயன்றபோது அந்த நபர் டேங்க்கவரில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். பின்னர் டேங்க் கவரில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்