முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம்

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருச்செந்தூர்

 

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப் 18-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலை 7 மணிக்கு அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் பவனி வந்து அருள்பாலித்து வந்தார். திருவிழா சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று திருக்கோயில் அதிகாலை 3.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அம்பாள் தேரில் எழுந்தருள காலை 6.15 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சுப்பிரமணியசுவாமி கோவில் இணை ஆணையர் வரதராஜன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்;. தேரோட்டத்தில் இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், திருவிழா பணியாளர் பிச்சையா, தலைமை காவலர் சிவா, மணியம் மது உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் வரதராஜன், தக்கார் கோட்டை மணிகண்டன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்