முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை அன்னதானம்:

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் உச்சப்பட்டி கிராமத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை மற்றும் உச்சப்பட்டி கிளை கழகத்தின் சார்பில்  பொதுமக்கள் இரண்டாயிரம் பேருக்கு  அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சியினை தமிழக வருவாய்துறை அமைச்சரும் கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

 அன்னதானம் அமைச்சர் தொடங்கி வைத்தார்:

திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் மறைந்த தமிழக முதல்வரின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக திருமங்கலம் ஒன்றியம் உச்சப்பட்டி முனியாண்டி கோவில் வளாகத்தில் ஒன்றிய அம்மா பேரவை மற்றும் உச்சப்பட்டி கிளை கழகத்தின் சார்பில் பொதுமக்கள் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்நிழ்ச்சிக்கு மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன் தலைமை வகித்தார். திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன், உச்சப்பட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த அன்னதான விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சரும் கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கி நிகழச்சியை தொடங்கி வைத்தார்.முன்னதாக உச்சப்பட்டி முனியாண்டி கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வரவேற்றனர்.


அப்போது மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்செல்வம்,திருப்பதி,ஒன்றிய அவைதலைவர் அன்னகொடி,ஒன்றிய துணைசெயலாளர் சுகுமார்,இணை செயலாளர் சுமதிசாமிநாதன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பழனிச்சாமி,சிவஜோதிதர்மர்,முனியாண்டி,பிச்சைமணி,கள்ளிக்குடி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா,முன்னாள் உரப்பனூர் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள்  திருமங்கலம் ஒன்றிய,கிளைகழக,சார்புஅணி நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago