முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பேடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      சென்னை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா என்ற போதை புகையிலை பொருட்கள், இதர புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகளை தயாரிப்பவர்கள், பதுக்கி வைத்து சப்ளை செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் .ஜார்ஜ்,உத்தரவிட்டார். அதன் பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து, மேற்படி தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, சி.எம்.பி.டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 11.00 மணியளவில் 100 அடி ரோடு, நெசப்பாக்கம் சந்திப்பு அருகில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா பாக்கெட்டுகள் ஆகியவைகளை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராம்குபேர், வ/56,அண்ணா நகர் மேற்கு விரிவு, முகப்பேர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ மாவா, 96 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 400 ஆனுஆ பான் மசாலா பாக்கெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்