முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு - ஒரு பெண் கைது

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      சென்னை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று முன் தீனம் காலை கடத்தப்பட்ட மூன்றரை வயது சிறுவன் தனிப்படை போலீசால் நேற்று மீட்கப்பட்டான். சிறுவனை கடத்திய பெண்னையும் போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பர்கத்துலா என்பவர் நேற்று காலை உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு தனது மூன்றரை வயது மகன் முகம்மது ஆசிப் உடன் சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் சிறுவன் காணாமல் போனதைக் கண்டு பதறிய பர்கத்துலா போலீசில் புகாரளித்தார்.புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மருத்துவமனை வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் சுமார் 50 வயதுமிக்க பெண் ஒருவர் சிறுவன் ஆசிப்பை கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த காட்சி அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியானது.இக்கடத்தல் சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், சி.சி.டி.வி காட்சிப் பதிவுகளை கொண்டு சென்னை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள டீ கடையில் கடத்தப்பட சிறுவனுடன் ஒரு பெண் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பெண்னை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், கடத்தப்பட சிறுவனையும் மீட்டனர்.கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு வேறு ஏதேனும் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.முன்னதாக, ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும், குழந்தை பத்திரமாக மீட்க எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் அம்மருத்துவமனை டீன் பொன்னம்பலம் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்