முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதிரிவேட்டில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேட்டில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை ஒட்டி செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

பாதிரிவேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு வரவேற்றார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, தொகுதி செயலாளர் தியாகராயம், பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் முல்லைவேந்தன்,நகர செயலாளர் மு.க.சேகர், அதிமுக நிர்வாகிகள் டேவிட்குமார்,டேவிட்சுதாகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அவை தலைவர் சந்திரன் வரவேற்றார்.

 

கூட்டத்தில் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பேசுகையில் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களால் தமிழக மக்கள் மகிழ்ந்திருந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு அவர் வழியில் நின்று தமிழக ஆட்சி நடைபெற்று வருகிறது, அதிமுக-வின் ஆட்சி எப்போதும் தொடரும், இந்த ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

 

தொடர்ந்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் புலவர் பூ.செல்வராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ரமேஷ்குமார், சதீஷ், சுதாகர், முன்னாள் கவுன்சிலர்கள் தயாளன், கோபி, இமாச்சலம், அதிமுக நிர்வாகிகள் இமையம் மனோஜ், திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்