முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.பி சத்திரம் பகுதியில் வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கிய இருவர் கைது

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      சென்னை

சென்னை செனாய்நகர், குடிசைப்பகுதி, பி.பிளாக் என்ற முகவரியில் கணேசன் (எ) லிங்கம், வ/29, என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன் தீனம் இரவு சுமார் 9.00 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான குமரன் (எ) குமார், சேவியர், சுப்ரீத், ஈஸ்வரன் ஆகிய நான்கு நபர்களுடன் சேர்ந்து செனாய் நகர் கல்லறை சாலை அருகே மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் கணேசன் (எ) லிங்கத்தை மேற்படி நான்கு நபர்களும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த கணேசன் (எ) லிங்கம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கணேசன் (எ) லிங்கம் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது,டி.பி.சத்திரம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்ட 1. குமரன் (எ) குமார். வ/20, பாடி, 2.சேவியர், வ/19, கல்லறை சாலை, செனாய் நகர் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி மற்றும் 3 உருட்டுக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாகயுள்ள சுப்ரீத், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட குமரன் (எ) குமார், சேவியர் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்