Idhayam Matrimony

ஆட்டோவில் தவறவிட்ட நகையை திருப்பி ஒப்படைத்த டிரைவர்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      சென்னை

பழைய வண்ணாரப்பேட்டை அருகே ஆட்டோவில் தவறவிட்ட நகையை திருப்பி ஒப்படைத்த டிரைவரை உதவி கமிஷனர் ஆனந்த குமார், வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜவகர் ஆகியோர் பாராட்டினர்.

 

பழைய வண்ணாரப் பேட்டை கெனால் தெருவை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி நாகராணி. இவர் நேற்று முன்தினம் அடையாரில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். அதன் பின்னர் பஸ் மூலம் அடையாறில் இருந்து தங்க சாலைக்கு வந்தார். பின்னர் தங்க சாலையில் இருந்து ஆட்டோ மூலம் வீடு திரும்பினார். அப்போது அவர் கைபையில் வைத்து இருந்த 12 பவுன் நகை மாயமானது.இது குறித்து நாகராணி வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று மாலை கொருக்குபேட்டை காமேசன் நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற ஆட்டோ டிரைவர் தன் ஆட்டோவை சுத்தம் செய்த போது ஒரு நகைபை கிடைத்ததாகவும், அது யாருடையது என்று தெரியாததால் வண்ணாரப் பேட்டை போலீசில் ஒப்படைக்க வந்ததாக கூறி நகையை இன்ஸ்பெக்டர் ஜவகரிடம் ஒப்படைத்தார். அவர் நகை பையை வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த நகை நாகராணிக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 12 பவுன் நகையும் நாகராணியிடம் ஒப்படைக்கபட்டது.ஆட்டோவில் தவறின 12 பவுன் நகையை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் பன்னீர் செல்வத்தை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஆனந்த குமார், வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜவகர் ஆகியோர் பாராட்டினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்